பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பகுதியில், இந்தியாவின் மேற்குப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மிகப் பெரிய மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் தொற்றுநோயின் கொடிய எழுச்சி விரைவாக தளர்த்தப்படுவதாக நம்பத் தொடங்கினர்.
மகாராஷ்டிராவின் வர்தாவில் உள்ள 1,000 படுக்கைகள் கொண்ட லாப நோக்கற்ற கஸ்தூர்பா மருத்துவமனையின் கோவிட்-19 வார்டில் அப்போது 28 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். அதேபோன்று, கடந்த ஆண்டு வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது, சுமார் 180 நோயாளிகள் இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களில் அவ்வப்போது அந்த வார்டே காலியாக இருந்தது.
இதையடுத்தும், கோவிட்-19 வார்டில் உள்ள 300 படுக்கைகளில் 100 படுக்கைகள், மருத்துவமனையின் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டன. கடந்த ஆண்டு இறுதிமுதல் இந்த ஆண்டின் முதல் இரு மாதங்கள் வரை நாடு முழுவதும் நோய்த்தொற்று குறைந்திருந்தது. வர்தாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறத் தொடங்கினர்.
கஸ்தூர்பா மருத்துவமனையில், சுகாதார ஊழியர்கள் ஒரு கடுமையான ஆண்டை பொறுத்துக் கொண்டனர். அவர்களில் 70 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டதுடன், கொரோனாவின் நாள்பட்ட அறிகுறிகளால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
😛இதனால் என்ன சொல்ல வரன். "மாஸ்க்" போட்டு வெளியே செல்லவும்...... வணக்கம் 🙏

Mameee maja tha
ReplyDelete🤣 Smart work
Delete